பெங்களூருவில் இந்தியாவின் முதல் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தால் தபால் நிலைய கட்டிடத்தை ஒன்றியஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவில் பாரம்பரிய கட்டிட தொழில்நுட்பமான செங்கல் மற்றும் பிற மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்களைப் போல இல்லாமல் முழுக்க முழுக்க ரோபோ தொழில்நுட்பத்துடன் அதிநவீன 3D பிரிண்டிங் மூலம் கட்டப்பட்ட அஞ்சல் அலுவலகம் பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது.
லார்சன் & டூப்ரோ நிறுவனம் மற்றும் சென்னை IIT நிறுவன வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது.
பெங்களுரில் அமைந்துள்ள இந்த தபால் அலுவலக கட்டிடம் 1021 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.